ஜப்பானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரத்து 484 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இன்றைய தினம் கடந்த நாட்களை விடவும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களில் 697 பேர் டயமன் பிரின்சஸ் கப்பலை சேர்ந்தவர்களெனவும் 14 பேர் சீனாவில் இருந்து விமானம் மூலம் வருகை தந்தவர்களெனவும் ஜப்பன் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. ஜப்பானில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் டயமன் பிரின்சஸ் கப்பலை சேர்ந்தவர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.