கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதியிடப்பட்டிருந்த போதை மாத்திரைகளின் பெறுமதி ஒருகோடியே 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொதி 5 மாதங்களாக மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியத்திலிருந்து குறித்த போதைமாத்திரைகள் அடங்கிய பொதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை முகவரி போலியானதென தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.