வேட்புமனு பொறுப்பேற்கும் காலப்பதிக்குள் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக்காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கள் என்பன மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.