ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செய்குழு இன்று கூடவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமென சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.