கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள் மூலமாகவும் பரவலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வைத்திருக்கும் நபரொருவர், கொரானோ தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், நாணயத்தாளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் தங்கியிருப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சீனாவின் ஹுபே மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களை அகற்ற அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.