பொகவந்தலாவை மடுல்சீமை பகுதியில் வனப்பகுதியொன்றில் தீ பரவியுள்ளது. பெருந்தோட்ட நிறுவனமொன்றுக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியிலேயே தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிசார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயினால் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக அழிவடைந்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொகவந்தலாவை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.