சோமாலியாவில் நடத்தப்பட் வான்வெளி தாக்குதல்களில் அல்ஷபாப் தீவிரவாத அமைப்பின் சிரேஷ்ட தளபதிகளில் ஒருவரான மொஹமட் கோர்காப் உயிரிழந்துள்ளார். சோமாலிய மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கூட்டுபடை நடவடிக்கையின் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சோமாலியாவின் சாகோ நகரில் கோர்காப் கொல்லப்பட்டுள்ளார். எனினும் அவரது உயிரிழப்பு தொடர்பான செய்திகள் உடனடியாக வெளியிடப்படவில்லை. அதற்கான காரணங்களும் வெளியாகவில்லையென பிபிசி இணையத்தளம் தெரிவித்துள்ளது.