சிரியாவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் ஹொம்ஸ் மாகாணத்தில் எரிபொருள் கொள்கலன் வண்டியுடன் குறித்த பஸ் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கொள்கலன் வண்டியின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்தமையால் குறித்த வண்டி மேலும் 15 வாகனங்களுடன் மோதியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பஸ்ஸில் பயணித்த அனைவரும் ஈராக் யாத்திரிகர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 70 இற்கு அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.