புத்தளம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் உள்ள 3 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கியிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்த 28 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.