கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கென அமெரிக்கா புதிய தடுப்பூசியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பரீட்சார்த்தமாக தடுப்பூசியை மிருகங்களிடம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களிடம் தடுப்பூசி சோதனை செய்யப்படுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் சிலவற்றின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ளனர். விரைவில் தடுப்பூசி மனிதர்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.