நச்சு வாயுவை சுவாசித்தமையினால் வாரியபொல பகுதியில் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாரியபொலவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்ட தீயில் இருந்து வெளிப்பட்ட புகையை சுவாசித்தமையின் காரணமாகவே இவ்வாறு இவர்கள் நோய்வாய்ப்பட்டனர். மயக்கம், அரிப்பு மற்றும் மூச்சு திணறல் ஆகியன காரணமாக இவர்கள் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.