சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் சிலாவத்துறை மற்றும் முருக்கன் பிரதேசங்களில் வைத்து அவர்கள் கைதானதாக இலங்கை மின்சார சபையின் விசாரணை முகாமையாளர் இந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் தமது குடியிருப்புக்களுக்கு இவ்வாறு சட்டவிரேதமாக மின்சாரத்தை பெற்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரின் உதவியுடன் மன்னார் பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
இதேவேளை சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவது நீதிமன்றில் பிணை கிடைக்கப்பெறாத குற்றமென இந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறும் நபர்களை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென மின்சார சபையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் விசாரணை முகாமையாளர் இந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.