தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 526 ஆக உயர்வடைந்துள்ளது. நூற்றுக்கு 90 வீதமானோர் டேகு பிரதேசத்திலே பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 376 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
டேகு நகர் தென்கொரியாவின் 4வது பாரிய நகரமாகும். அங்கு 2.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தென்கொரிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தென்கொரியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறைக்காலத்தை மேலும் ஒருவார காலத்துக்கு நீடிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.