இன்றைய தினம் விசேட தபால் பகிர்ந்தளிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவை பயிற்சிக்கென இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னிட்டு விசேட தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை நியமன கடிதங்கள் கிடைக்கப்பெறாத நபர்களுக்கு இன்றைய தினத்திற்குள் நியமனக்கடிதத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாற்பதாயிரம் பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம் தபாலிடப்பட்டன. அதில் நூற்றுக்கு 80 வீதமானோரை மாகாண பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவருட பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.