அரச சேவை என்பது மக்கள் சேவையே அன்றி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இடமல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்கு தொடர்பான தெரிவுக்குழுவின் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி கட்டுப்பாட்டு சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணைவாக சாதகமானபெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அரச மாகாண மற்றும் உள்ளுராட்சி துறைகளை சேர்ந்த 844 நிறுவனங்கள் இந்நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவற்றில் 55 நிறுவனங்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 23 நிறுவனங்களுக்கு வெள்ளி பதக்கங்களும் 31 சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=CB5Qwotp7EE&feature=youtu.be&fbclid=IwAR1tlA2Rdhzfml5rcMvy6si_8IItUMsPxdzEQpHK9jI4Eux0VAZ7BaPKcpU”]