இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையினால் முன்வைத்த 30/ 1 திட்டத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு எடுத்த தீர்மானம் ஐக்கிய குடியரசு உள்ளிட்ட இலங்கை தொடர்பாக செயற்படுகின்ற அடிப்படை குழுவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அடிப்படை குழுவில் ஐக்கிய குடியரசு, கெனடா, ஜேர்மன், வட மெசிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
ஐக்கிய குடியரசு மற்றும் இலங்கை தொடர்பான அடிப்படை குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு 2015ம் ஆண்டில் 30இன் கீழ் ஒன்று திட்டத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பாக கவலையடைவதுடன், இதுகுறித்து கூடிய கவனம் செலுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான சகல அடிப்படை விடயங்களையும் முன்னெடுத்துச்செல்லுமாறும் சட்டத்திற்கு மதிப்பளித்து அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதற்காக சகல இன மக்களிடையிலும் ஐக்கியத்தை அடிப்படையாக கொண்டு சுபீட்சம் மிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையிடம் கோரிக்கை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் கட்டமைப்பு போன்றவற்றுடன் தொடர்ச்சியாக புரிந்துணர்வுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு இலங்கை தொடர்பான அடிப்படை குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜெனீவாவில் உள்ள வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்சல் பெஜ்சலேவை சந்தித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர தூதுக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு போன்றவற்றின் பணிப்பாளர் நாயகங்களுடனும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சங்கத்தின் பொதுச்செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.