நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குறித்த காலப்பகுதியில் சிறுவர்களை வாகனங்களுக்குள் வைத்திருப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.