வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டவழக்கை ஏப்ரல் 3ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரையும் அடுத்த வழக்கு தவணையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். இரண்டு சந்தேகநபர்களும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கொன்று தொடர்பாக மகர சிறைச்சாலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தகவல் தருகையில் வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். வெள்ளை வேன் சாரதியாக முன் நின்ற சந்தேகநபர்களின் குரல்கள் பொருந்துவதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக திலிப்ப பீரிஸ் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான பூரண விசாரணைகள் அடுத்த 3 வாரங்களுக்குள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார். வழக்கின் சந்தேகநபர்களான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, அரச ஒளடத கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.