கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவியுள்ளது. இதேவேளை தென்கொரியாவில் நாளாந்தம் இவ்வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை சீனாவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சீனாவில் மாத்திரம் 433 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இக்காலத்திற்குள் தென்கொரியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 334 ஆகும் இதற்கமைய தென்கொரியாவில் ஆயிரத்து 595 பேர் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
உலகம் பூ_ராகவும் கொவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 138 ஆகும். 2801 பேர் உயிரிழந்துள்ளதாகவெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 32 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சீன அதிகாரிகள் தகவலளினக்கையில் கொரோனா வைரஸை உலக நாடுகளில் பரவுவதை எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கட்டுப்படுத்த முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். இதேவேளை இத்தாலியிலும் கொவிட் 19 வைரஸ் துரிதமாக பரவி வருகின்றது. இத்தாலியிலுள்ள எமது பிரதிநிதி இது தொடர்பாக தகவல் அளித்தார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=a4asbJvzCUA&feature=youtu.be&fbclid=IwAR0O-ihtvnUmXv9lRI04QkXZ87J15poriA6EPCJku5dsV2oyYu-zDyUGYvY”]