சர்வதேச ரீதியிலான வேலைத்திட்டங்கள் பலவற்றை தற்காலிகமாக இடைநிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறவிருந்த கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தாலி அயர்லாந்துக்கு இடையில் இடம்பெறவிருந்த ரக்பி போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யுமோ போட்டியையும் பிற்போடுவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கென விசேட கூட்டமொன்றையும் ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க மற்றும் தென்கொரியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த யுத்த பயிற்சிளை பிற்போடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் வரை யுத்த பயிற்சி பிற்போடப்படுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.