தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரை புதுக்கடை முதலாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.