இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. இது கடந்த 24 மணித்தியாலங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட 25 வீத அதிகரிப்பு என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் அதிகளவானோர் தொடர்ந்தும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தென்கொரியாவில் 12 பேரும், ஈரானில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகளவில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையானது இரண்டாயிரத்து 772 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவுக்கு வெளியிலும் வைஸ் தொற்றும் வேகம் அதிகரித்துள்ளமையினால் சகல நாடுகளும் அவதானத்துடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.