பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மெதிரிகிரிய புதிய நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைபின் மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் எட்டுவதற்கு எதிர்வரும் பொது தேர்தலில் சகல மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
(நான் ஜனாதிபதியாக இருந்த போதும் சுகாதார அமைச்சராக இருந்த போதும் போதை பொருள் ஒழிப்பிற்காக விரிவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். தொன் அளவிலான போதை பொருட்களே அப்போது கைப்பற்றப்பட்டன. வெளிநாடுகளில் பதுங்கியிருந்த பாரியளவிலான போதை பொருள் வர்த்தகர்களை நாட்டு வரவழைக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கினோம். பொலன்னறுவை மாவட்டத்திலும் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் இடம்பெறுகின்றது.பிள்ளைகள் தொடர்பாக பெற்றோர் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும். )
[ot-video type=”youtube” url=”https://youtu.be/7uJzu6WBupk”]