நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 28 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. குடி நீரில் கடல் நீர் கலந்தமையினால் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, பாணந்துறை , களுத்துறை மற்றும் தொடங்கொட ஆகிய பகுதிகளிலுள்ள 2 இலட்சத்து 12 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹுபிடிய, தெரணியாகல, கலிகமுவ மற்றும் வரகாபொ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வரட்சியினால் இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.