128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.