தென்கொரியா மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் சேகரிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தூதரக மட்டத்தில் அதுதொடர்பான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக குறித்த இரு நாடுகளிலும் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பிரதி நடவடிக்கை பிரதானி சிசிர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.