முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனரத்னவுடன் வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் முன்னிலையாகியிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற 44 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.
வைத்திய மத்திய நிலையமொன்றுக்குள் இரவு வேளையில் உள்நுழைந்து பணியாளர்களை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி பணம் மற்றும் தங்கநகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இருவருக்கும் மேலதிகமாக, மேலும் சந்தேக நபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.