ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 43 வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது. இன்று இடம் பெறுகின்ற உயர்மட்ட மாநாட்டில் கலந்துகொண்டவெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான 2019 மார்ச் மாதத்திற்கான 30 இன் கீழ் ஒன்று பிரேரணைக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் அறிவித்துள்ளார்.