டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 என்ற சர்வதேச கண்காட்சி மார்ச் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்ப இயந்திரங்கள் ஆகியன இதில் இடம்பெறவுள்ளன. 11 ஆவது முறையாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் பொது மக்களுக்காக திறந்திருக்கும்.