கட்சி ஒழுக்கங்களை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இவ்வாரத்திற்குள் நிறைவுசெய்யப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுவினூடான இறுதி தீர்மானம் பெறப்படுமென கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை துரிதமாக நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.