அடுத்த வாரமளவில் இந்தியாவிலுள்ள சிரேஷ்ட நண்பர்களை சந்திக்க எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்த்ர மோதியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
நாளைய தினம் அவர் இந்தியா செல்லவுள்ளதோடு, நாளை மறுதினம் வரை அங்கு தங்கியிருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், அவரது பாரியார் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் இந்திய சுற்றுப்பயணத்தில் இணையவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.