அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற சின்னங்கள் குறித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்தே தேர்தல்கள் ஆணைக்குழு கண்டறியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“2 இடங்களில் வாக்கு பதிவுக்கான சந்தர்ப்பங்கள் இல்லை. எதேச்சயாக அவ்வாறு இடம்பெற்றாலும் கூட வாக்குகளை இரு இடங்களில் செலுத்த முடியாது. வர்ணம் தீட்டி புதிதாக நான் பரிசீலனை செய்தேன். இன்னும் கூட இவ்வர்ணம் நீங்க வில்லை. இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே வாக்குகளை பதிவு செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாத்திரமே சின்னம் தொடர்பாக கவனம் செலுத்தப்படும். எனினும் இதற்கு முன்னர் மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் அதிமேதகு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் சின்னம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவோம். புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி அல்லது தற்போதைய பாராளுமன்றம் தொடர்ந்தும் காணப்பட்டாலும் சரி ஒன்றிணைந்து இதற்கு தீர்வை வழங்கி பழைய முறைமைக்கு தேர்தலை நடாத்தும் சட்டமூலத்தை வலுப்படுத்தி இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியமென எதிர்பார்க்கின்றோம்.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/fBX4-9QbSng”]