இலங்கை மக்கள் இனமத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடள் கௌரவமாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுவது அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மகா சிவராத்திரி தினத்தையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்ள்ளார். உலகெங்கும் வாழும் சைவ சமய மக்கள் சிவபெருமானுக்கு விரதமிருந்து சமய வழிபாடுகளில் ஈடுபடும் இன்றைய மகா சிவராத்திரி தினத்திற்காக எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சைவ சமய மக்களின் வணக்க வழிபாட்டை கொண்ட முக்கிய தினமாக இன்றைய தினம் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் விழித்திருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு விரதமிருந்து சைவ மக்கள் இறைவனின் அருளோடு தனது வாழ்க்கையை ஒளிபெறச் செய்கின்றனர். இலங்கை அமைதியான பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும். தாம் விரும்பும் மதத்தை பின்பற்ற அவர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில்மேலும் தெரிவித்துள்ளார்.