அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பதவிகளில் 180 நாட்கள் தொடர்ச்சியான சேவையிலிருந்த உரிய கல்வித்தகுதி உடையோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. பொது நிர்வாக உட்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

180 நாட்களை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
படிக்க 0 நிமிடங்கள்