போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதால் நீண்ட நேரம் கண்விழிக்க முடியும். சமிபாட்டு சக்தி அதிகரிக்கும், சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும், பாலியல் ரீதியான கவர்ச்சி கிடைக்கும் மற்றும் பாலியல் சக்தி அதிகரிக்கும் போன்ற விடயங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை முற்றிலும் பொய் என்பதை மாணவர்களுக்கு அறியத்தர விழிப்புடணர்வூட்டும் செயலமர்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.