நைஜீரியாவில் அகதி முகாமொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பொகோஹாரம் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக நைஜீரியாவிலுள்ள மக்கள் அயல்நாடான நைஜரீல் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகளாவானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் மேற்கு ஆபிரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் போது முறையான திட்டம் அவசியமென மனித உரிமைசார் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.