பா.உ பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவுக்கு 32 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சிலாபம் நீதிமன்றம் இவ்வபராதத்தை விதித்துள்ளது. அதனை செலுத்த தவறினால் ஆறு மாத சிறை தண்டனையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
சிலாபம் பந்ததெனிய பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, நபர் ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரின் சாரதி அனுமதி பத்திரமும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. சேதம் விளைவிக்கப்பட்ட வீட்டை புனரமைத்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் அரச வாகனங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பான பிரிதொரு வழக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.