பாடசாலைகளை அண்டியதாக போதை பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0777 128 128 என்பதே அந்த அவசர தொலைபேசி இலக்கம் ஆகும். பாடசாலைகளை அண்டியதாக போதை பொருள் கடத்தல்களை தடுக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்பான நாளைய தினம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 49 பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இசுருபாய கல்வியமைச்சில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. அபாயரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கல்வியமைச்சு, பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த, பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.