அமைச்சரவைக்கோ பாராளுமன்த்துக்கோ பொதுமக்களுக்கோ அறிவிக்காமல் கடந்த அரசாங்கம் அங்கீகரித்த ஜெனீவா பிரேரணைகளில் இருந்து நீங்கிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சான்றுகளுடன் விளக்கமளிப்பதற்கும் நாடு தொடர்பாக உள்ள தவறான கருத்துக்களை மனித உரிமை பேரவையில் சரிசெய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
30இல் ஒன்று 40இல் ஒன்று உள்ளிட்டபல ஜெனீவா பிரேரணைகளுக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார். அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பக்கசார்பான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு இராணுவ வீரர்களுக்கு எதிராக இந்த பிரேரணைகள் 2015ம் 2016ம் ஆண்டுகளில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் டயஸ்போரா வெளிநாடுகளில் செயற்படும் எல்ரீரீஈ சார்பானவர்கள் உள்ளிட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் இராணுவ வீரர்களுக்கு எதிராக பல சாட்சியங்களை முன்வைத்துள்ளன. அதற்கான பதில் வழங்கும் உரிமையை இரத்து செய்து மனித உரிமைகள் பேரவை இந்த குற்றச்சாட்டுக்களை 2015, 2016ம் ஆண்டுகளில் சுமத்தியுள்ளன. மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிராயுதபானியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீட்டு எடுத்தமையுள்ளிட்ட இந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் எதுவும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அப்போதைய அரசாங்கம் இதற்கு இணை அனுசரணை வழங்கியதுடன், தற்போது இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் நாட்டின் இறைமைக்கு எதிராகவும் மேற்கு நாடுகளின் வேலைத்திட்டங்கள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு எதிரான அறிக்கை எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம் அவ்வனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சாட்சியங்களுடன் பதில் அளிப்பதற்கு ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளது. இதேநேரம் ஜெனீவா குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கருத்து வெளியிடப்பட்டன.