சிறைக்கைதிகளை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. கைதிகளின் திறமைகளை இனங்கண்டு, அவர்களை உரிய துறைகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வேலைத்திட்டம் வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆர்.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட திறமைமிக்க கைதிகளே தொழில் நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.