சர்வதேச கிரிக்கெட் சபை 2023ம் ஆண்டு முதல் 2031ம் ஆண்டு வரை நடைபெறவுள்ள ஐசீசீ யின் மிகப்பெரிய தொடர்களுக்கான கால அட்டவணைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2023ம் ஆண்டு மகளீருக்கான ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டி நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு டுவண்டி – 20 ச்செம்பியன்ஸ் கிண்ணமும், அதே ஆண்டில் மகளீருக்கான டுவண்டி – 20 ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும் நடைபெறவுள்ளன. 2025ம் ஆண்டு உலக டெஸ்ட் ச்செம்பியன்ஸ் கிண்ண தொடரும், ஒருநாள் சர்வதேச ச்செம்பியன்ஸ் கிண்ண தொடரும், மகளீருக்கான உலக கிண்ண போட்டியும் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளீருக்கான டுவண்டி – 20 உலக கிண்ண போட்டி நடைபெறவுள்ளது. 2027ம் ஆண்டு டெஸ்ட் ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும், ஒருநாள் சர்வதேச உலக கிண்ண போட்டிகளும், மகளீருக்கான ஒருநாள் சர்வதேச ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும் நடைபெறவுள்ளன.
2028ம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளீருக்கான டுவண்டி – 20 ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. 2029ம் ஆண்டு டெஸ்ட் ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும், ஒருநாள் சர்வதேச ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும், மகளீருக்கான ஒருநாள் சர்வதேச உலக கிண்ண போட்டிகளும் நடைபெறவுள்ளன. 2030ம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளீருக்கான டுவண்டி – 20 உலக கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. 2031ம் ஆண்டு டெஸ்ட் ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளும், ஒருநாள் சர்வதேச உலக கிண்ண தொடரும் நடைபெறுமென ஐசீசீ அறிவித்துள்ளது.