இலங்கையின் மின் உற்பத்தியில் நூற்றுக்கு 74 வீதம் டீசல் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையின் மொத்த மின் உற்பத்தி நூற்றுக்கு 23.1 ஆக குறைவடைந்துள்ளது. நிலவும் கடும் வறட்சியான காலநிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும்.
அதற்கமைய பிரதான மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மொத்த மின்சக்தியின் அளவின் நூற்றுக்கு 74.9 வீதமானவை டீசல் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனூடாக இடம்பெறும் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. எனினும் தற்போது காணப்படுகின்ற தேவையை கருத்திற்கொண்டு எவ்வித மின் துண்டிப்பும் இடம்பெறாதெனவும், தொடர்ச்சியாக மின் விநியோகம் இடம்பெறுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.