பிரித்தானியாவை தாக்கியுள்ள டெனிஸ் சூறாவளி தாக்கம் காரணமாக பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்ப்பட்டுள்ளன. கடும் காற்று மற்றும் பலத்த மழையுடன் கூடிய வானிலை பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் நிலவுகிறது. இதனால் வெள்ள அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. அனர்த்தங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு வேல்ஸிற்கு அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பிரான்சின் வடமேற்கு பகுதியியும் டெனிஸ் சூறாவளிக்கு முகம்கொடுத்துள்ளது. இதனால் அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மின் துண்டிப்பு பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.