ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் சுதந்திர கட்சிக்குமிடையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இரு கட்சிகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய கூட்டணி குறித்து கலந்துரையாடுவதே சந்திப்பின் நோக்கமாகும். எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.