கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடையுமென சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது. வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பாரிய பாதிப்பு ஏற்படுமென சுட்டிக்காட்டப்படுகிறது. கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் 100 உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.