ஜப்பான் கப்பலில் கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை 355 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் துறைமுகத்திற்கு வருகைத்தந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல், கொவிட் – 19 வைரஸ் அச்சம் காரணமாக கடலில் தனித்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் மூவாயிரத்து 700க்கும் அதிகமான பயணிகள்உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வந்த நிலையில், இதுவரை 355 பேருக்கு கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் – 19 வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் 27 நாடுகளில் கொவிட் – 19 வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தகிள் தெரிவிக்கின்றன.