சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது கூடுதல் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். சமூக வலைத்தளங்களல் அடையாளம் தெரியாத நபரக்ளுகளுக்கு தமது புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும்போது குறுந்தகவலினூடாக தொடர்புகளை ஏற்படுத்தும் சிலர் தமக்கு பகிரப்பட்ட புகைப்படங்களை தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதனால் பெண்கள் அதிகளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு குறித்த புகைப்படங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அவ்வாறான நபர்கள் குறித்து தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.