2020ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டித்தொடருக்கான அட்டவணை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கமைய மார்ச் மாதம் 29ம் திகதி முதல் மே மாதம் 24ம் திகதி வரை போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது.
இம்முறை தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றி, ஐ.பி.எல் தொடர்களில் ஹெட்ரிக் வெற்றி சாதனையை நிலைநாட்டியது. கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டித்தொடர் இந்த வருடம் 13வது தடவையாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.