கண்டி – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் வண்டியும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. குருநாகலிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், குறித்த திசையிலேயே முன்னோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியின் பின்புறத்தில் மோதியுள்ளது.
விபத்தில் தனியார் பஸ்சின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர். அவர்கள் குருநாகல் மற்றும் மாவத்தகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மாவத்தகம பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.