காலி – கொழும்பு பிரதான வீதியின் வாதுவ பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்களில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது. இதில் 74 வயதான பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் கைதாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.